கம்பன் சொல்லத் தயங்கிய அழகு! மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் மிருணாள் தாகூர், தனது சமீபத்திய புகைப்படங்கள் மூலம் இணையத்தை கலக்கி வருகிறார். அவரது லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ!
"கம்பன் சொல்ல வந்து கூச்சம் கொண்டு எழுதாத ஒரு உவமை நீ" என்று வர்ணிக்கும் அளவுக்கு, தனது வசீகரமான புன்னகையாலும், எதார்த்தமான நடிப்பாலும் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை மிருணாள் தாகூர். சின்னத்திரையில் தொடங்கி இன்று இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
தெலுங்கில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படத்தில் 'சீதாலட்சுமியாக' ரசிகர்களைக் கவர்ந்த மிருணாள், அந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் தன் வசப்படுத்தினார். தொடர்ந்து நானியுடன் இணைந்து நடித்த 'Hi நானா' திரைப்படம் அவரது நடிப்புத் திறமைக்கு மற்றொரு சான்றாக அமைந்தது. சமீபத்தில் வெளியான 'Hai Jawani Toh Ishq Hona Hai' படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது மிருணாள் தாகூர் கைவசம் பல சுவாரஸ்யமான திட்டங்களை வைத்துள்ளார். அந்த வரிசையில், 'Pooja Meri Jaan' மற்றும் 'ராக்கா' போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர காத்திருக்கின்றன. தனது ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மிருணாள், இந்தியத் திரையுலகின் நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

0 Comments
No comments yet. Be the first to comment.