TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

Share This Article:

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களாக போராடி வரும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று (செப்டம்பர் 4) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

Content image

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு முறைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் தொடர்பாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

Content image

முன்னதாக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், அவர்களுடன் அரசு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்களின் சிரமங்களை அரசு புரிந்துகொண்டுள்ளதாகவும், சில கோரிக்கைகளுக்கான ஆவணங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். நிர்வாக ரீதியான சிக்கல்களுடன் நிதி சார்ந்த பிரச்சினைகளும் இருப்பதாகவும், வெகு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இன்றைய பேச்சுவார்த்தையில் தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து சுமுகமான முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions