TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

6-ம் வகுப்புக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துங்கள்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

Share This Article:

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய மும்மொழிக் கொள்கையை நடப்பு கல்வியாண்டுக்குப் பதிலாக 2027 கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் மூன்றாவது மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பை வெளியிட உள்ளது.

6-ம் வகுப்புக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துங்கள்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய மும்மொழிக் கொள்கையை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்துவதற்குப் பதிலாக, 2027 கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு சி.பி.எஸ்.இ.யிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய 6-ம் வகுப்பு மாணவர்களில் மூன்றாவது மொழியை இந்த கல்வியாண்டிலேயே படிக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்மொழிக் கொள்கை என்ன?

சி.பி.எஸ்.இ. கடந்த மே 15-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 9-ம் வகுப்பு மாணவர்கள் 2026 ஜூலை 1 முதல் மூன்று மொழிகளைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இந்த நடைமுறை தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மொழிக் கல்வி அணுகுமுறையுடன் தொடர்புடையதாகும்.



Content image

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சி.பி.எஸ்.இ.யின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டு, மத்திய அரசு, சி.பி.எஸ்.இ. மற்றும் என்.சி.இ.ஆர்.டி. ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

6-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு குறித்து பரிசீலனை

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.

மாணவர்களுக்கு தேவையான கால அவகாசம் கிடைக்கும் வகையில், 6-ம் வகுப்புக்கான கட்டாய மும்மொழிக் கொள்கையை அடுத்த கல்வியாண்டு வரை தள்ளிவைப்பது குறித்து சி.பி.ஏஸ்.இ. பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், நடப்பு கல்வியாண்டிலேயே மூன்றாவது மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கலாம் என்றும் கூறினர். 

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions