TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி, 3 பேர் காயம் - ரஷ்ய தூதரகம் கடும் கண்டனம்!

Share This Article:

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அங்கு வேலை பார்த்து வந்த இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 இந்தியர்கள் காயமடைந்துள்ள நிலையில், ரஷ்ய தூதரகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி, 3 பேர் காயம் - ரஷ்ய தூதரகம் கடும் கண்டனம்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில வருடங்களாக நீடித்து வரும் போர் தற்பொழுது தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழில்சார் பகுதிகளை இலக்காகக் கொண்டு உக்ரைன் ராணுவம் திடீர் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

  • இத்தாக்குதலில் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன.
  • சம்பவ இடத்தில் மீட்புப் பணியினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  • காயமடைந்த 3 இந்தியர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்தியப் பிரஜை உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது ஆழந்த இரங்கலையும், உக்ரைனுக்கு எதிராக கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ரஷ்ய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட இந்தியர்களின் விவரங்களைச் சேகரிக்கவும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உறுதி செய்யவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாஸ்கோவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions