2029-ல் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்- எம்.எல்.ஏ கனிமொழி பேட்டி...
2029 மக்களவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என எம்.எல்.ஏ. கனிமொழி தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் புதிய விவாதம் உருவாகியுள்ளது.
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. கனிமொழி தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, 2029ஆம் ஆண்டு பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யாது என்றும், தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும், 2026ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தைப் போலவே, 2029ஆம் ஆண்டிலும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என அவர் தெரிவித்தார். தனது தலைவர் விஜய் 2029ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் கனிமொழி கூறினார்.
இதனிடையே, கனிமொழியின் கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் எனத் தெரிவித்தார். மேலும், தவெக எம்.எல்.ஏ.க்கள் தங்களது தலைவரின் மீதான ரசிகர் மனநிலையில் இருப்பதால் விஜய்யை பிரதமர் வேட்பாளராகக் கூறுவதாகவும் அவர் விமர்சித்தார்.
2029 மக்களவைத் தேர்தல் இன்னும் தொலைவில் உள்ள நிலையில், விஜய் மற்றும் ராகுல் காந்தியைச் சுற்றி உருவாகியுள்ள இந்த பிரதமர் வேட்பாளர் விவாதம் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.