TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை: புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டோம் - மு.க.ஸ்டாலின்!

Share This Article:

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் புதிய அரசு நடத்தியுள்ள சோதனை முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம் என்றும், புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கு திமுக அஞ்சாது என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை: புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டோம் - மு.க.ஸ்டாலின்!

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) நடத்தியுள்ள சோதனை நடவடிக்கை முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய பூச்சாண்டிகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை:

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 6 மணி முதல், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லம், மற்றும் சென்னை அடையாறு, திருவான்மியூர், ஆர்.ஏ. புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை செய்தி பரவியதை அடுத்து, திருச்சியில் உள்ள நேருவின் வீட்டின் முன்பு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.







Content image

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

"உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலைமையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் கே.என்.நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.

ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!"


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions