TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தவெக எம்.எல்.ஏ பேரம் பேசும் விவகாரம் , முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது போலீஸ் விசாரணை!

Share This Article:

தவெக எம்.எல்.ஏ-வை விலை பேசி, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ பேரம் பேசும் விவகாரம் , முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது போலீஸ் விசாரணை!

புகாரும் கைது நடவடிக்கையும்

உத்தங்கரையைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ என். இளையராஜா, சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது, தமக்கு ரூ.35 கோடி பேரம் பேசி மிரட்டல் விடுக்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் பெயர் சிக்கல்

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அசோக்குமார் மற்றும் கைது செய்யப்பட்ட நரேஷ் ஆகியோர் சென்னையில் ரகசியமாகச் சந்தித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் தேடுதல் வேட்டை

இதனையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் தொடர்புகள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான பண்ணை வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions